கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் தினகரன் தான் துரோகி- முதலைமச்சர் பழனிசாமி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் தினகரன் தான் துரோகி என்று முதலைமச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதனிடையே முதலைமச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  டிடிவி தினகரன் தான் துரோகி, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு இன்னல்களை அளித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் தினகரன் தான் துரோகி.
தினகரன் மற்றும் அவரது கட்சி கரைந்து போய்விடும் . மேலும் தினகரனை நம்பி சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எங்கே என்று கேள்விஎழுப்பினார்.அவர்கள் நடுவீதியில் உள்ளனர் என்று தெரிவித்தார். .