மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் செய்த இளைஞர்கள் கைது !

மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் செய்த இளைஞர்கள் கைது.

இன்று இளம் தலைமுறையினர் அதிகமாக இணையத்தில் தான் உலா  வருகின்றனர்.இவர் இணையத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என்று  சொல்வதை விட,  இணையம் தான் இவர்களை அடிமையாக்கி உள்ளது என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள், இளம் தலைமுறையினரை கவரும் வண்ணமாக தான் உள்ளது. 

 இந்நிலையில், புதுக்கோட்டையில் இரண்டு இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல்  சென்றதால், போலீசார் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை திரும்ப பெற சென்ற இளைஞர்கள், காவல்நிலையத்தில் வைத்து மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து போலீசார் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.