10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்யாதீர்கள் – நெல்லை மாவட்ட துணை கமிஷனர்

10-ம் வகுப்பு மாணவர்களை கேலி  செய்ய வேண்டாம் என நெல்லை மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, இந்த மாணவர்களை கேலி செய்யும் விதமாக, இணையத்தில், மீம்ஸ்கள் உலா வந்தது. 

இந்நிலையில், இதுகுறித்து திருநெல்வேலி துணை கமிஷினர் அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறுகையில், 10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் எனவும், அனைவரும் செய்யும்  கேலியால், மன உளைச்சல் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்ததாகவும்  கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.