பெண்கள் தங்கள் முக அழகை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புவது வழக்கம். இதற்காக பல அழகு சாதனங்களைப் பெண்கள் விலைகொடுத்து வாங்கி உபயோகிக்கின்றனர். குறிப்பாக அழகு சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது உதட்டுச்சாயம் என்று சொல்லக்கூடிய லிப்ஸ்டிக் தான். முன்பெல்லாம் லிப்ஸ்டிக் என்றால் சிவப்பு நிறம் தான் ஆனால், தற்பொழுது இது வெறும் சிவப்பு நிறத்தில் மட்டும் இருந்து விடுவதில்லை.
ஒவ்வொரு உடைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தவாறு வெவ்வேறு நிறங்களில் உதட்டுச் சாயங்கள் தற்பொழுது வந்துவிட்டது. இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் பெண்கள் யாரும் இதை உபயோகிப்பதை இன்னும் நிறுத்திவிடவில்லை. உதட்டுச் சாயம் பூசினால் தான் வெளியில் செல்ல முடியும் என்ற அளவுக்கு இதற்கு அடிமையாகிவிட்டனர். இதில் அதிகளவில் உடலுக்கு தீமை விளைவிக்க கூடிய ரசாயனங்கள் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து தற்பொழுது நாம் அறிந்து கொள்ளலாம்.
லிப்ஸ்டிக்கில் மாங்கனீசு, காட்மியம், குரோமியம் மற்றும் அலுமினியம் ஆகியவை அதிகளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக நாம் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவிக் கொண்டு பின்பு உணவு உண்ணும்பொழுது நேரடியாக இவை உடலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.
மேலும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த லிப்ஸ்டிக் உபயோகிப்பதும் ஒரு காரணமாக அமைகிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் உதட்டு சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி மிகவும் அவசியம் என்றாலும் மூலிகை உதட்டு சாயங்களை பயன்படுத்தலாம்.
லிப்ஸ்டிக் உபயோகிக்கும் பொழுது அடர்த்தியான நிறங்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த அடர்த்தியான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்குகளில் தான் தீங்கு தரும் இரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. மேலும், லிப்ஸ்டிக்கை பூசுவதற்கு முன் நெய் அல்லது வாஸ்லின் அதாவது பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை உபயோகிப்பதும் நல்லது. விலை மலிவாக உள்ளது என்பதற்காக தரம் குறைவான லிப்ஸ்டிக்குகளை வாங்காமல் ஒன்று வாங்கினாலும் நல்ல தரமானதை வாங்கி உபயோகியுங்கள்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…