இன்று கோபாலபுரம் சென்ற அழகிரி , திமுகவில் இருந்து அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் திமுக தலைவராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார் அழகிரி.ஆகவே அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக அழகிரி தரப்பில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.மேலும் பாஜகவில் இணைய உள்ளார் என்றும் தகவல் வெளியாகியது.தொடர்ச்சியாக தகவல்கள் வந்த நிலையில் ,நான் பாஜகவில் சேரவுள்ளேன் என சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அழகிரி கூறினார்.
இந்நிலையில் இன்று திடீரென்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து அறிய கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.அழகரி சென்றார்.இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை.அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…
Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…
மதுரை சித்திரை திருவிழா -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம். மீனாட்சி அம்மன் வரலாறு : மீனாட்சி அம்மன்…
ஐபிஎல் 2024 : சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல, ரோஹித் ஷர்மா தான் டி20 இரட்டை அடிப்பார் என கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள்…
Google : இஸ்ரேல் ராணுவம் உடனான ஒப்பந்ததிற்கு எதிராக போராடிய ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் மீதான…