பிக்பாஸ் சீசன் 4 டாஸ்க்கிற்கு குரல் கொடுத்தாரா  கவின் .?

பிக்பாஸ் சீசன் 4-ல் நடைபெற்ற சொல்லி அடி டாஸ்க்கில் குரல் கொடுத்தது நான் இல்லை என்று கவின் விளக்கமளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் “சொல்லி அடி”டாஸ்க் நடத்தப்பட்டது .இதில் நடுவராக ஜித்தன் ரமேஷ் நியமனம் செய்யப்பட , திண்டுக்கல் தண்டபாணி என்பவர் தனது குரல் வழியாக போட்டியை நடத்தினார் .முட்டை என்று சொல்லும் போது யார் முதலில் அந்த முட்டையை எடுக்கிறாரோ அவர் தனது எதிரில் நிற்பவரின் தலையில் முட்டையால் அடிக்க வேண்டும்.இதனை பிக்பாஸ் போட்டியாளர்கள் மிகவும் ஜாலியாக விளையாடினார்கள் .

இந்த நிலையில் திண்டுக்கல் தண்டபாணியாக பேசியவர் கவின் என்று பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்தது . இதற்கு தற்போது கவின் விளக்கமளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் ,அது நான் இல்லைப்பா , உண்மையாகவே திண்டுக்கல் தண்டபாணியாக பேசியவருக்கே இந்த கிரெடிட்கள் போய் சேரட்டும் என்று கூறியுள்ளார்.