இன்று காஷ்மீரில் உள்ள ராணுவ படையுடன் சேர்ந்த தோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டதை தொடந்து இன்று முதல்  தோனி ஆகஸ்ட் 15 தேதி வரை விக்டர் படையுடன் சேர்ந்து பணியில் ஈடுபட உள்ளார்.

தோனி ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு  பணிகளை மேற்கொள்ள  உள்ளார்.இதற்காக தோனி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருந்த தொடர்களில் இருந்து விலகி.  இரண்டு மாதம் அவகாசம் கேட்டு இருந்தார்.

author avatar
murugan