கெத்து காட்டும் தல தோனி !நேற்றைய போட்டியில் 1 ரன் எடுத்து புதிய சாதனை!

நேற்றைய போட்டியில் இந்தியா , பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் இறங்கிய  இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் சேர்ந்தனர்.
பின்னர் மழை காரணமாக போட்டியை  40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர். அடுத்ததாக  களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்றைய ஆட்டத்தில் 2 பந்துகளை மட்டுமே பிடித்து 1 ரன் எடுத்து வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.ஆனாலும் தல தோனி 1 ரன் எடுத்தும் சாதனை படைத்தது உள்ளார்.
ஒருநாள் போட்டியில்  அதிகமாக விளையாடிய இந்திய அணி வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார்.இதற்கு முன் ராகுல் டிராவிட் 340 போட்டிகளில் விளையாடி இரண்டாம் இடத்தில் இருந்தார்.நேற்றைய போட்டியில் தோனி தனது 341 போட்டியில் விளையாடியது மூலம் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மேலும் ஒருநாள் போட்டியில்  அதிகமாக விளையாடிய இந்திய அணி வீரர்களில் சச்சின் 463 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.
 

author avatar
murugan