தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த இந்திய அணி பயிற்சியாளர்.!

  • இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார்.
  • ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இந்திய அணி நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. இதில் முதல் டி20 ஆக்லாந்து மைதானத்தில் போட்டி நடைபெற்றது. பின்னர் எதிர்கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதில் இந்திய அணி 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி 26-ம் தேதி (நாளை)அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை அண்மைக்காலமாக தவிர்த்துவரும் முன்னாள் கேப்டன் தோனி, விரைவில் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தோனியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்