தோனி மிக சிறந்த கேப்டன்- சுப்பிரமணிய எஸ் பத்ரிநாத்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேப்டன் தோனியை பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார், மேலும் இவருடன் தமிழக வீரர் சுப்பிரமணிய பத்ரிநாத் தோனி பற்றி கூறியது, தோனி வீரர்களுக்கு மிகவும் அதிகமாக வாய்ப்பு கொடுப்பார், அவர் மிகவும் சிறந்த கேப்டன், மிடில் ஆடரில் நான் விளையாடுவேன் மேலும் தோனி நான் மிடில் ஆடரில் நன்றாக விளையாடுவது என்று நினைத்தால் எனக்கு அந்த வாய்ப்பு அவர் அளிப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் எங்களுடைய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது தோனி அணியை மீட்பார், மேலும் நாங்கள் ஓய்வறைக்கு செல்லும் போது எங்கள் அனைவரையும் அழைத்து கருத்துக்களை கூறி, ஒரு பயிற்சியளிப்பர். மேலும் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.