கங்குலியை விட தோனி தான் நல்ல கேப்டன்- ஸ்ரீகாந்த்.!

கங்குலியை விட தோனி தான் நல்ல கேப்டன்- ஸ்ரீகாந்த்.!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தோனி தான் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லியேயே தெரியவேண்டாம் மேலும் தோனி கடைசியாக 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார், ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனியை பற்றி பேசியதில் டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தோனி கேப்டனாக இருக்கும் பொழுது தான் சாதனை படைத்தது, மேலும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் கங்குலியை விட தோனி தான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.

ஒட்டுமொத்தமாக சொந்த மண்ணில் நடந்த தொடர்களில் நீண்ட கால அடிப்படையில் யார் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்? நிச்சயம் எம்எஸ் தோனி தான் என நினைக்கிறேன். என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube