காஷ்மீரில் பதற்றமான இடத்தில் ரோந்து பணியில் மஹேந்திரசிங் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மஹேந்திர சிங் டோனிக்கு ராணுவத்தில் கவுரவ பதவியாக லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. அண்மையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, தெற்கு காஷ்மீர் பகுதியில் விக்டர் ஃபோர்ஸ்  எனும் பகுதியில் உள்ள ராணுவ பகுதியில் தரைப்படை வீரர்களுடன் இணைந்து இரண்டு வாரம் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட இடமாம்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து விட்டதாலும் அங்கு மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.