அமைதி அமர்க்களம் காட்டிய தல தோனி! பாதாளத்திலிருந்து மீண்ட சென்னை சீமையர்கள்!

  • கப்பல் மாலுமி போல் சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டார் தல தோனி

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது .

பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை பின்னர் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஓரளவிற்கு தடுத்து ஆடினார். தற்போது வரை 14 அவர்களுக்கு 88 ரன் மட்டுமே அடுத்துள்ள சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது

படுமோசமாக திணறிய சென்னை அணியை கப்பல் மாலுமி போல் அற்புதமாக திசைதிருப்பி சரிவில் இருந்து மீட்டார் தோனி. அற்புதமாக ஆடிய தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து சென்னையை கரை சேர்த்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும். கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 175 ரன்கள் விளாசியது.

சென்னை ஆடுகளத்தில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை அடைந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கடினமான இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் தனது கேப்டன் அஜின்கியா ரகானேவை சென்னை பந்துவீச்சாளர் தீபக்கிடம் இழுந்தது. 2 ஓவர்களின் முடிவில் ஏற்று ரன் எடுத்து ப்ரு விக்கெட்டுடன் ஆடி வருகிறது

author avatar
Srimahath

Leave a Comment