விராட்கோலியிடம் திறமை குறைந்த அணியை விட்டு சென்றது தோனி- கௌதம் கம்பீர்.!

விராட்கோலியிடம் திறமை குறைந்த அணியை விட்டு சென்றது தோனி என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபலமான வீரரான கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனி மற்றும் விராட் கோலி பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, திறமை குறைந்த அணியை கேப்டன் தோனி விராட் கோலியிடம் ஒப்படைத்துள்ளார்.

தோனி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமையான அணி வீரர்கள் கொடுக்கப்பட்டது, அதனால் தான் அவரால் பல கோப்பை களை வெல்ல முடிந்தது, ஆனால் கோலி கேப்டனாக இருக்கும் பொழுது அவருக்கு திறமை இழந்த அணி கொடுக்கப்பட்டது அதனால் ஐசிசி கோப்பைகளை வெல்ல விராட் கோலியால் வெல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

விராட் கோலி கடந்த 2014 ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் 2017 ம் ஆண்டு அணைத்து போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்றார். இதுவரை அவருடைய கேப்டன்ஷியல் விளையாடப்பட்ட 55 போட்டிகளில் கிட்ட தட்ட 33 போட்டிகளில் வெற்றி பெற்று அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பெற்றவர் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு பிறகு பேசிய அவர் விராட் கோலியின் மீது ஐசிசியின் கோப்பைகளை வெற்றி கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது, மேலும் இதனால் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றும் கௌதம் கம்பீர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.