3D-யில் தயாராகும் தில்லுக்கு துட்டு-3! படம் எங்கு தயாராக உள்ளது பற்றி வெளியான முக்கிய தகவல்!

ஹீரோ சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு படத்தின் இரு பாகங்களும் பெரிய ஹிட்டாக அமைந்தன. காரணம் சந்தானத்தை சின்னத்திரையில் லொள்ளு சபாவில் இயக்கிய  ராம்பாலாதான் இப்படங்களின் இயக்குனர் என்பதால் சந்தானத்துக்கேற்ற கதைக்களத்தையும், கலாய் வசனங்களையும் எழுதி படத்தை ஹிட்டாக்கினார்.

தற்போது மூன்றாவது பாகத்திற்காக இயக்குனர் ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். முதல் பாகம் தமிழ்நாடு, இரண்டாம் பாகம் கேரளா மூன்றாவது பாகம் ஜெய்ப்பூரில் கதைக்களம் நடப்பது போல உருவாக உள்ளதாம். மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாம். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.