தொடரும் ஆக்சிஜன் பற்றாக்குறை.. ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தவான்!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காசு கொடுத்தும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நாம் இப்போது இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, காலத்தின் தேவையாக உள்ளது. நீங்கள் இத்தனை நாட்களாக எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும் நான் நாட்டு மக்களுக்காக கொடுக்கவுள்ளேன்”

அந்தவகையில், இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், ரூ. 20 லட்சமும், இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எனக்கு கிடைக்கும் பரிசு தொகையையும் மிஷன் ஆக்ஸிஜனுக்கு கொடுக்கவுள்ளேன். கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ஈடுபடும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் செய்யும் பணிக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். ஒன்றுபடுவோம், வெல்வோம்” என்று தெரித்துள்ளார்.

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

7 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

8 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

9 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

10 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

10 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

11 hours ago