தை தமிழ் மாத ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது ..??

தை மாத ராசிபலன்கள் ரிஷ ராசிக்காரர்களுக்கு எப்படி உள்ளது.மாதம் ஏற்றம் தருமா..?என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பை ஈடுகட்ட போகிறது.

Related image

ரிஷப  ராசிக்காரர்கள் :

தை மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் இப்போது உங்களின் முன்னேற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் அஷ்டமச் சனியுடன் இணைந்து சனியை சுபத்துவப் படுத்தகூடிய அற்புதமான நல்ல ஏற்பட்டு உள்ளதால் உங்களுக்கு இம்மாதம் சிறப்பான மாதமாகும் .

உங்களுக்கு எட்டில் சனி இருப்பதால் எவரிடமும் வாக்குவாத்தை தவிர்ப்பது நல்லது  யாரையும் நம்ப வேண்டாம்.சனி மற்றும்  சுக்ர சேர்க்கை ஏற்பட்டு உள்ளதால்  பெண்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.

செலவுகள் தேவையற்ற விஷயங்கள் வடிவில் வரும் என்பதால் பார்த்து செலவு செய்யுங்கள்.பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுகள் இருக்கும்.

இம்மாதம் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் ஏற்பட  வாய்ப்பு இருக்கிறது அதனால் வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது.

இம்மாதத்தில் ஆன்மிக தொடர்பான விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஒரு சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யகூடிய  வாய்ப்பு கிடைக்கும். இம்மாதத்தில் எவரையும் நம்பி மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக பேச வேண்டாம்.வியாபாரிக்கு  சில விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் இம்மாதம்  வருமானம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

அரசுத் துறையிள் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு  வேலைப்பளு சற்று அதிகமாகவே  இருக்கும். தந்தை வழி தொடர்பில் நல்ல சம்பவங்கள் நடைபெரும் இதில் தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயின் உடல்நிலையை  கவனித்து கொள்ள வேண்டும். நாற்பது வயதைக் கடந்த ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள் . யாருக்கும் இம்மாதத்தில் ஜாமீன் போட வேண்டாம்.அதே போல் எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.         மாததத்தில்  வரவு ஒரு வழியில் வந்ஹ்தால் செலவு ஒரு வழியில் வரும் மாதமாகும் எனவே இம்மாதத்தில் சற்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய மாதமாகும்.

author avatar
kavitha

Leave a Comment