கஷ்டங்களை தவிடு பொடியாக்கும் தண்டாயுதபாணி..!தை திருவிழா கொடியேற்றம்..!!

முருகனின் மூன்றாம் படைவீடாக கருதப்படும் பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இவ்விழாவினையொட்டி பழனி முருகன் கோவிலில் உபகோவிலாக உள்ள  பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜையானது கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.

இந்நிலையில் வருகின்ற 20 தேதி திருக்கல்யாணமும் இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 21 தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.இதில் பக்தர்கள் கலந்து  கொண்டு காவடி,வேல் குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள்.இதனை தொடர்ந்து  24 தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூச திருவிழாவானது  நிறைபெறுகிறது.
author avatar
kavitha

Leave a Comment