கிருமிநாசினி தெளிக்கும் 5 ஆட்டோக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்.!

திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் 5 ஆட்டோக்களை தமிழ்நாடு பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள மலையப்ப சுவாமிக்கு பக்தர்கள் நகை, பணம், உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்குவதும், சிலர் தங்கள் முதல் முதலாக தயாரிக்கும் வாகனத்தையும் காணிக்கையாக வழங்குவதும் வழக்கம்.

அந்த வகையில், வேலூரைச் சேர்ந்த ஒருவர் பேட்டரி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் 15 லட்சம் மதிப்பிலான கிருமிநாசினி தெளிக்கும் 5 பேட்டரி ஆட்டோக்களை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.