சத்ரபதி சாகு மஹராஜ் நினைவு நாள் ட்வீட்.! மன்னிப்பு கேட்ட தேவேந்திர பட்னாவிஸ்.!

சத்ரபதி சாகு மஹாராஜ் நினைவு நாளையொட்டி, தேவேந்திர பட்னாவிஸ்  டிவிட்டரில் வருத்தத்தை குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜாவை  வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். 

பாஜக கட்சியால் மேல் சபை எம்பியாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சாகு மகாராஜ் அவர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பலரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். அதே போல மஹாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் தனது இரங்கல் வருத்தத்தை தெரிவித்திருந்தார். 

அவர் டிவிட்டரில் குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜைவை  வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனை அறிந்த தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், மறுப்பு பதிவிடுகையில், 

‘ தனது டுவிட்டர் பதிவில் உள்ள தவறு குறித்து தெரியவந்தது, உடனே அதை மாற்றகோரி அலுவலகத்தில் தெரிவித்தேன். புகழ்பெற்ற ஆட்சியாளர் சாகு மகாராஜ்.  அவரை அவமதிக்க வேண்டுமென நினைத்து கூட பார்க்கவில்லை. இருந்தாலும், அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்’ என தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்டிருந்தார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.