முதல்வர் பழனிசாமியை பாராட்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.!

முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய துணை முதல்வர், முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் என கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல்வராக பழனிசாமி இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றும் நதிகளை இணைக்க வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். எந்தவித குறையும் சொல்லமுடியாத ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காவிரி – குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ் முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்