டெங்கு காய்ச்சல் பாதிப்பு 11 மாநிலங்களில் அதிகமாக உள்ளது..!

சீரோடைப்-2 டெங்கு காய்ச்சல் பாதிப்பு 11 மாநிலங்களில் அதிகமாக உள்ளதாகவும்,  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சீரோடைப்-2 எனும் வைரஸ் மூலமாக பரவக்கூடியது டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 11 மாவட்டங்களில் இந்த சீரோடைப்-2  டெங்கு பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஜூலை 14 ஆயிரத்திற்கும் மேட்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெங்கு பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் கணக்கெடுப்பு, டெங்கு தொடர்பான அறிகுறிகள், ரத்த வங்கிகள், போதுமான அளவு ரத்தம் ஆகிய டெங்கு தடுப்பு பணிகளுக்காக தனி குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal