பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

சமீப நாட்களாக பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆண்ராடம் பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று கண்டன ஆர்பாட்டம்  நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.