டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு .!

டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஜூலை 10 முதல் தொடங்கவிருந்த இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் 15 -க்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் மாணவர்களின் எதிர்ப்பின் மத்தியில், தேர்வுகள் ஜூலை 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan