டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி முதலில் 21 நாள்கள் அதாவது ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 21 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாததால் பின்னர் மீண்டும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 14 ,000 தாண்டியது.கடந்த 6 நாள்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லியில் கொரோனாவால் 1707 பேர் பாதிக்கப்பட்டும் , 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கருவி பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.