டெல்லி குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நிறைவு..!

டெல்லியில் குடியரசு தினவிழா நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வழியனுப்பி வைத்தார்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார். அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது. இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில்  தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து பெண்களின் இருசக்கர வாகனங்களின் சாகசங்கள், விமானப்படையினரின் சாகசங்கள் நடைபெற்றது.

குடியரசுதின நிகழ்வுகள் தற்போது டெல்லியில் குடியரசு தினவிழா நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வழியனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி பார்வையாளர்களை பார்த்து கையசைத்தப்படி காரில் புறப்பட்டார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.