டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு.. அச்சுறுத்தல் கண்டு பின்வாங்க மாட்டேன்- கிரெட்டா காட்டம் ..!

விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன் என கிரெட்டா தன்பெர்க் ட்விட் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வரும் கிரிப்டோ தன்பெர்க் ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திகொண்டிருக்கும் போராட்டம் தொடர்பாக ட்வீட் செய்ததற்காக டெல்லி காவல்துறை  கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

இதனால், கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன். அச்சுறுத்தல் கண்டு பின்வாங்க மாட்டேன், அச்சுறுத்தல் மூலம் தனது நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது என தெரிவித்தார்.

author avatar
murugan