உலகிலேயே கொரோனா சோதனைகள் டெல்லியில் தான் அதிகம் – அரவிந்த் கெஜ்ரிவால்

உலகிலேயே கொரோனா சோதனைகள் டெல்லியில் தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில்  கொரோனாவுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் உலகிலேயே மிக அதிகமானவை, ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 3,057 சோதனைகள் இங்கு நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார் .

நேற்று நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கொரோனாவை பெரிய அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது டெல்லியின் இரண்டு கோடி மக்களின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமானது என்று அவர் கூறினார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.