டெல்லி சிறுமி மரணம் : ராகுல் காந்தி புகைப்படங்களை பகிர்ந்ததால், ட்வீட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய NCPCR!

டெல்லியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்ததால் ட்விட்டருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று சிறுமியின் வீட்டுக்கு சென்று, அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் சிறுமியின் பெற்றோர் மற்றும் ராகுல் காந்தி காருக்குள் அமர்ந்து பேசிய போது எடுக்கப்பட்ட வண்ணம் இருந்தது. இதில் சிறுமியின் பெற்றோரின் முகம் தெளிவாக தெரிந்தாலும், அது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாலும் இந்த பதிவு குறித்து சர்ச்சை கிளம்பி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், போக்சோ சட்டத்தை மீறி பெற்றோரின் புகைப்படத்தைத் பதிவு செய்வதன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ராகுல் காந்திக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பி அந்த பதிவை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவர் சிறுமிகளின் அடையாளம் வெளிப்படுத்தக்கூடிய எந்த தகவல் அல்லது புகைப்படங்களையும் வெளியிடுவது சட்டவிரோதமானது எனவும் ட்விட்டருக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் ஒரு முறை எச்சரித்து நினைவு படுத்தி உள்ளது.

Rebekal

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

7 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

10 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

11 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

12 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

12 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

12 hours ago