பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள டெல்லி விவசாயிகள் முடிவு…! பாஜகவை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு..!

டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜகவை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 3 மாதங்களை கடந்து தொடருகின்ற நிலையில், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தின போதிலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜக-வை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.