ஒலிம்பிக் மல்யுத்தம்:அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி ..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த அரையிறுதியில் தீபக் புனியா,அமெரிக்க வீரரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில்,அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேவிட்,போட்டியின் இறுதியில் 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதனால்,வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை தீபக் இழந்தார்.மேலும்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தீபக் புனியா விளையாடவுள்ளார்.