கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சேர்ந்த கார்த்திகா (29) முதுநிலை பயிற்சி மருத்துவர் ஆவார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகா. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு தான் குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு கொரோனாவின் தீவிரம் அதிகமாக காணப்பட்ட காரணத்தால், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்துள்ளார். மருத்துவர் கார்த்திகா உயிரிழப்பதற்கு முன்பு தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தயவுசெய்து கொரோனா வைரசை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பேசுகிறேன். அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னையில் கார்த்திகா என்ற கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …