மரணமே உனக்கு சிரிக்க தெரியாது…! அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய்…! கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து…!

பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்த  நிலையில், விவேக்கின் பூத உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நல்ல சகோதரனை இழந்து விட்டேன்.

இன்று, பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.