“அன்புள்ள ராகுல் ஜி….2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம்” – எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில்..!

2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பாஜக அப்படி இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் (AIMC) குழுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய லோகோவை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.இதனையடுத்து,இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பா.ஜ.க -வின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கி, மையத்திற்கு எதிரான சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார்.குறிப்பாக,தற்போதைய பாஜக அரசின் ‘சச்சா ஆப்கே துவார்’ என்ற பெண் எதிர்ப்பு கொள்கைகளை விவரிக்கும் ஒரு சிறு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும்,ராகுல் காந்தி அவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைவர் மோகன் பகவத் மற்றும் பாஜக – காங்கிரஸ் இடையேயான கொள்கைகளில் உள்ள வேறுபாட்டை விளக்கி கூறினார்.
கோட்சே, ஏன் அவரை சுட்டுக் கொன்றார்?:
இது தொடர்பாக அவர் கூறுகையில்: “இந்து மதத்தைப் புரிந்துகொண்டு அதை நடைமுறையில் வைத்தவர் மகாத்மா காந்தி.முழு உலகமும் ‘மகாத்மா காந்தி’யை ஒரு உதாரணமாகக் கருதுகிறது.ஆனால்,ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் ஏன் அவரது தோளில் 3 தோட்டாக்களை பாய்ச்சியது? .காந்தி அகிம்சையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர், மேலும் அகிம்சை என்பது இந்து மதத்தின் அடித்தளம், பிறகு கோட்சே, ஏன் அவரை சுட்டுக் கொன்றார்? .நான் மற்ற கட்சி கொள்கைகளுடன் சமரசம் செய்ய முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளை என்னால் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.
பிஜேபி ‘போலி இந்துக்கள்’ ,அவர்கள் இந்துக்களைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மதத்தை வர்த்தகம் செய்கிறார்கள்,எனவே, அவர்கள் இந்துக்கள் அல்ல”,என்று கூறினார்.
மோகன் பகவத்தின் படத்தை எந்தப் பெண்ணுடனும் பார்த்தீர்களா?:
தொடர்ந்து பேசிய அவர் கூடுதலாக, மகாத்மா காந்தியின் படத்தைப் பார்க்கும்போது, ​​அவரைச் சுற்றி 2-3 பெண்களைப் பார்ப்பீர்கள். மோகன் பகவத்தின் படத்தை எந்தப் பெண்ணுடனும் பார்த்தீர்களா?,பிரதமர் மோடி-ஆர்எஸ்எஸ் எந்தப் பெண்ணையும் பிரதமராக்கவில்லை,ஆனால்,காங்கிரஸ் உருவாக்கியது, காங்கிரஸ் பெண்களுக்கு ஒரு மேடை கொடுத்தது.ஆனால், ஆர்எஸ்எஸ் பெண்களை ஒடுக்குகிறது”, என்று அவர் கூறினார்.

இந்நிலையில்,ராகுல்காந்தி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறியதாவது:”அன்புள்ள ராகுல் ஜி, 2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம்.
ஆனால்,பாஜகவைப் பொறுத்தவரை, பெண்களுக்கு அதிகாரமளிப்பது பெண்களைச் சுற்றி இருப்பதில் அல்ல, அவர்களுக்கு பதவி வழங்குவதில் உள்ளது.அதன்படி, நிதி அமைச்சராக சீதாராமன் ஜி உள்ளார்., வெளியுறவு அமைச்சராக சுஷ்மா ஜியும்,மேலும்,பெண் முதல்வர்களாக சுஷ்மா ஜி, ஆனந்திபென் ஜி,வசுந்தராப்ஜப் ஆகியோரும் ,ஆளுநராக நஜ்மா ஜி, பேபி ராணி மௌரியா ஜி, முர்மு ஜி ஆகியோரும் இருந்தனர்.
எனவே,நீங்கள் உங்கள் அளவுகோலை வைத்திருங்கள் நாங்கள் எங்களுடையதை வைத்துக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

8 seconds ago

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

34 mins ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

48 mins ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

1 hour ago

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

2 hours ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

2 hours ago