சமூக நீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் ஆபத்து – முக ஸ்டாலின்

சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டு.

சென்னை ராயப்பேட்டையில் திமுக சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்ட கருத்தரங்கின் 2வது மாநில மாநாட்டில் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது, சட்டத்துறையால் நிறைவேற்றப்பட்ட சிறப்புகளை குறித்து பேசிய பின், தற்போது சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது என குற்றசாட்டியுள்ளார்.

வாசல்கள் இல்லாமல் வீடோ, வழக்கறிஞர்கள் இல்லாமல் கட்சியோ நடத்த முடியாது. சொந்த உழைப்பில் நிற்பவர்கள் நாங்கள், அடுத்தவர் உழைப்பில் நிற்பவர்கள் அல்ல. 2ஜியை நோ-ஜி ஆக்கியது நம் சட்டத்துறைதான். உள்ளாட்சி தேர்தலை நடத்த வைத்ததும் திமுக சட்டத்துறைதான். குரூப் 1 தேர்வுகளில் இருக்கும் முறைகேடுகளை கண்டறிந்து வழக்கு போட்டது நம் சட்டத்துறைதான் என கூறியுள்ளார்.

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணியை பெற்று தந்தது திமுகதான். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு தடை போட்டது தமிழக அரசு. அந்த தடையை உடைத்து எறிந்தது திமுகவின் சட்டத்துறை. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் திமுகதான்.

எதோ பட்டியல் கொடுத்துட்டு தேர்தலுக்காக செய்கிறேன் என்று நினைக்காதீங்க, அடுத்த பட்டியல் தயாரா இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு திமுக தான் ஆட்சியில் அமர உள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்து காத்திருக்க அவசியம் இல்லை. ஆகவே, திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாமே நடவடிக்கை எடுப்போம். குற்றம் செய்தவர்களை சிறையில் அடைப்போம் என ஆளும் கட்சியினர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

20 mins ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

8 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

10 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

12 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

13 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

13 hours ago