தண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும்?
நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் நீர்சத்து குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படக் கூடும். அனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்த தண்ணீரை குடிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது.
நம்மில் பலர் வெளியில் வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பின் போது, அவசரத்தில் தண்ணீரை நின்றுக் கொண்டே அவசர அவசரமாக தண்ணீர் குடிப்பதுண்டு. ஆனால், அவ்வாறு குடிப்பது நல்லதல்ல. அவ்வாறு தண்ணீர் குடிக்கும் போது, நமது உடலுக்கு கிடைக்கவேண்டிய அணைத்து ஊட்டசத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.
எனவே, இனிமேல் நின்றுகொண்டோ அல்லது நடந்து கொண்டோ தண்ணீர் அருந்துவதை தவிர்த்து, நிதானமாக அமர்ந்தவாறு தண்ணீர் அருந்த கற்றுக் கொள்ளுங்கள்.