வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு…!!

வடசென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 வது அலகில் 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் 600 மெகா வாட் மின்சாரமும் என 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment