ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் மூலம் பாராட்டு.

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களது நடிப்பு திறமைக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதல்வர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக தேர்தலுக்கும், ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்புள்ள இல்லை என டெல்லியில் செய்தியாளர் கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்