ஆரணியில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு !

ஆரணியில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் இன்று காலை 07.30 மணி அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது.

விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube