அரைசதம் அடிக்க விடாமல் அணைகட்டிய பும்ரா-சஹால்..! உலககோப்பை சுவாரஸ்யம்

அரைசதம் அடிக்க விடாமல் அணைகட்டிய பும்ரா-சஹால்..! உலககோப்பை சுவாரஸ்யம்

உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.பவுலிங் செய்த இந்திய அணி தனது கட்டுக்கோப்பான பில்டிங்கால் ரன்களை கட்டுப்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா,சஹால் ,குல்தீப்,புவனேஷ் இவர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தென்னாப்பிரிக்கா அணி வீரர்களை அரை சதம் கூட அடிக்கவிடாமல் தடுத்து உள்ளனர்.அந்த அணியின் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் மட்டும் 42 ரன்கள் எடுத்தார்.
தங்களது பந்து வீச்சில் மூலம் பதம் பார்த்த பும்ரா 10 ஓவரில்  35ரன்களை கொடுத்து   3விக்கெட் எடுத்தார் , சஹால் 10 ஓவரில் 51 ரன்களை கொடுத்து 4விக்கெட் எடுத்தார், புவனேஷ்வர குமார் 10 ஓவரில் 44 ரன்களை கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சு முன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை திணற தான் வைத்துள்ளது.
 

author avatar
kavitha
Join our channel google news Youtube