இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!வெட்டிய பிறகு ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி !இருவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டினார். ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.   அரிவாளால் இளம்பெண்ணை வெட்டிய பிறகு சுரேந்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.