ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.10.21 கோடி அபராதம் வசூல்.!

தமிழகம் முழுவதும்,ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும்,ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 4,48,456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5,44,566 வழக்குகள் போடப்பட்டுள்ளது.  ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10,21,80,599 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்