தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…!

  • தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்தது.

அதன்படி, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • அதன்படி, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
  • மேலும்,பழக்கடைகள், பூக்கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • எலெக்ட்ரிக்கல், ஹார்டுவேர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.