ஊரடங்கு நீட்டிப்பு: பிப்.8 முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்க அனுமதி – தமிழக அரசு

ஊரடங்கு நீட்டிப்பு: பிப்.8 முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்க அனுமதி – தமிழக அரசு

வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் கல்லூரி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்று பிப்.8 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேரம் கட்டுப்பாடு இன்றி இயங்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் இயங்கலாம். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளளில் 100% இருக்கைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube