#ElectionBreaking:இன்னும் சற்று நேரத்தில்…இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு!

#ElectionBreaking:இன்னும் சற்று நேரத்தில்…இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு!

கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி,21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில்,பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றியை பதிவு செய்தது.

இதற்கிடையில்,வாக்கு எண்ணிக்கையின் போது,இயந்திரம் பழுதானதால், கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் பிப்.24ஆம் தேதி மறுவாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AV இல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.ஆனால்,மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் மட்டும் மறுவாக்குப்பதிவு காரணமாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் என்றும் மற்ற அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டன என்றும் நேற்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube