கேரளாவில் பரபரப்பு காதலனுக்கு cut செய்த காதலி கைது
கேரளாவில் பரபரப்பு காதலனுக்கு cut செய்த காதலி கைது
திருவனந்தபுரம் : மலப்புரம் அருகே தன்னை ஏமாற்றிய காதலனின் ஆண் உறுப்பை அறுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பொன்னானி அருகே உள்ள புறத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இர்ஷாத்(26). துபாயில் பணி புரிந்து வருகிறார். பெரும்பாவூரை சேர்ந்த ஒரு பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது இர்ஷாத்தின் வீட்டிற்கு தெரியாது. துபாய் ெசன்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பினார். இவருக்கு வீட்டார் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய இர்ஷாத் ஒப்புக்கொண்டுள்ளார். இதை அறிந்த இளம்பெண் இர்ஷாத்தை குற்றிப்புறத்தில் உள்ள ஒரு லாட்ஜிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து இர்ஷாத் அங்கு வந்தார். இருவரும் அறைக்குள் சென்றனர்.
சிறிது நேரத்தில் இர்ஷாத்தின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் இர்ஷாத் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இளம்பெண்ணை காணவில்லை. தப்பி ஓடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இர்ஷாத்திடம் போலீசார் விசாரித்தபோது தன்னுடைய ஆண் உறுப்பை தானே அறுத்ததாக கூறியுள்ளார். ஆனால் இளம்ெபண்ணிடம் விசாரித்தபோது தன்னை ஏமாற்றியதால் இர்ஷாத்தின் ஆண் உறுப்பை, தான் அறுத்ததாகவும் இதற்காக திரூரில் ஒரு கடையில் பிளேடு வாங்கியதாகவும் கூறியுள்ளார்.