IPL 2020: கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே.. வைரலாகும் நெட்டிசன்களின் புள்ளிப் பட்டியல்!

ஐபிஎல் 2020-ல் சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையை கைப்பற்றியதாக நெட்டிசன்கள் உருவாக்கிய புள்ளிப் பட்டியல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணி துபாய்க்கு வந்த நிலையில், ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார்கள்.

ரெய்னா விலகியது, சென்னை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அடுத்த விழாவும் இணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும்.

இந்தநிலையில், அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து, பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக புள்ளிப் பட்டியலை உருவாக்கி, அந்தப் புள்ளிபட்டியலில் சென்னை அணி, 2020 ஆம் ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த புள்ளிப் பட்டியல் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவிவருகிறது. அதுமட்டுமின்றி, பலரும் இந்த சம்பவம் நடந்தால் மகிழ்ச்சி எனும், நடக்க வாய்ப்புக்கள் கம்மி எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ரசிகர்களின் இந்த ஆசை நிறைவேறுமா??? பொறுத்திருந்து பாப்போம்.