IPL 2020: பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே, அணி.. போட்டியைக்காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளுக்காக இம்மாதம் துபாய் செல்லவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், இன்று சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டர்.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், சி.எஸ்.கே. அணி, இன்று முதல் 20 -ம் தேதி வரை (5 நாட்கள்) சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தது.

அதற்காக நேற்று தோனி, ரெய்னா, பியூஸ் சாவ்லா, தீபக் சஹர், உள்ளிட்ட வீரர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்த நிலையில், இன்று முதல் பயிற்சியை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக, பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி தலைமையில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, ரெய்னா உட்பட 15 வீரர்கள், முதல் நாள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கினார்கள். இதனால் போட்டி தொடங்குவது குறித்த ஆர்வம், ரசிகர்களிடையே நிரம்பி வழிகிறது.