இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ்.! துபாய் புறப்பட்ட சி.எஸ்.கே வீரர்கள்.!

தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர்.

கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது தாமதமாகவும், அதிலும், இந்தியாவில் நடக்க சாத்தியமில்லாததால், ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது.

இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் என மொத்தம் 51 பேர் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.

இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகுதான் துபாய் புறப்பட்டுள்ளனர். துபாய் சென்றதும் அவர்களுக்கு அங்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.