“நோன்புக்கு மத்தியில் 2 விக்கெட்களை வீழ்த்திய இம்ரான் பாய்”- ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட சென்னை!

ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலே இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கடந்த 25-ம் தேதி சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டிக்கு கடும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, இறுதிவரை போராடி 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதன்மூலம் சென்னை அணி, 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பந்துவீச்சில் சென்னை அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இம்ரான் தாஹிர், ரம்ஜான் பண்டிக்கைக்காக நோன்பை கடைபிடித்து வருகிறார். இதனால் அவர் காலை முதல் மாலை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலே இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், “நோன்பு இருந்ததற்கு மத்தியில் அணிக்காக அர்பணிப்புடன் விளையாடியது பற்றி கூற வார்த்தைகளே இல்லை இம்ரான் பாய்” என்று பதிவிட்டுள்ளது. தாஹிரின் இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.